நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் கீழ் இயங்கும் ONUR நிறுவனத்தின் நிதி பங்களிப்பின் மூலம் பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் திரு.கோ சிறிதரன் அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் இரண்டாம் மொழி(சிங்களம்) 100 மணித்தியால பயிற்சி நெறியானது 06.11.2025 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.


இப்பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலாளர், தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர், சிங்கள மொழி வளவாளர்கள் மற்றும் பயிலுனர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
















