மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் உற்பத்தி பொருட் கண்காட்சியும் விற்பனை சந்தையும் - 2025
மண்முனை மேற்கு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினால் மகளிர் தின வாரத்தினை முன்னிட்டு பெண் தொழில் முயற்சியாளர்கள் மூலம் நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற தொணிப்பொருளில் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் 11.03.2025,வவுணதீவு சந்தை வளாகத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும் இடம் பெற்றது.


இதில் பெண் தொழில் முயற்சியாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்காக முன்வைக்கப்பட்டது. இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .
















