விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளின் தேசிய கணக்கெடுப்பு தொடர்பான தெளிவூட்டல் கூட்டம்
மண்முனை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (12) விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளின் தேசிய கணக்கெடுப்பு தொடர்பான தெளிவூட்டல் கூட்டம் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் ஆலோசனையின் கீழ் இடம் பெற்றது.

இதில் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை எவ்வாறு கணக்கெடுப்பு மேற்கொள்ளலாம் ,எவ் முன்னாயத்தங்களை மேற்கொள்ளலாம் போன்ற விடயங்கள் தெளிவூட்டப்பட்டது .

இதில் உதவிப்பிரதேச செயலாளர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் , நிருவாக கிராம உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ,பொருளாதார உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .













