மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் Center for Justice and Change நிறுவனத்தின் அனுசரனையுடன் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் ஆலோசனையில் பிறப்பு அத்தாட்சி பத்திரம் இல்லாத மாணவர்களுக்கான நடமாடும் சேவை 28.05.2025 பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.



இந்நிகழ்வில் பிறப்பத்தாட்சி பத்திரம் இல்லாத மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் சேவைகள் வழங்கப்பட்டன.














