மண்முனை மேற்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த 2ம் கட்ட யோகா பற்றிய விழிப்புணர்வும் பயிற்சியும் 01.08.2025 காலை 9.00மணிக்கு பிரதேச செயலாளர் ந. சத்தியானந்தி அவர்களின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலுக்கமைய உதவி பிரதேச செயலாளர் திரு சோ.யோகராஜா அவர்களின் தலைமையில் கணக்காளர் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஐஸ்வர்யம் யோகா இன்சிற்ரியூட் பொறுப்பாளர் திரு எஸ் . ஸ்ரீதரன் மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகரும் ஐஸ்வர்யம் யோகா கலை மன்றத்தின் பொறுப்பாளருமான திரு அ. ஜெயகரன் மற்றும் யோகா பயிற்றுவிப்பாளர் திரு மு.கமலேந்திரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு உத்தியோகத்தர்களுக்கு யோகா பற்றிய விழிப்புணர் வினையும் பயிற்சியினையும் வழங்கி வைத்தனர்.













